என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பா.ஜனதா ஆட்சி: மத்திய அமைச்சர்
Byமாலை மலர்24 Nov 2020 2:54 PM GMT (Updated: 24 Nov 2020 2:54 PM GMT)
மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசேனா, முதல்வர் பதவிக்கான பிரச்சனை காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.
இந்நிலையில் அவுரங்காபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே சட்ட மேலவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேசும்போது ‘‘மகாராஷ்டிராவில் நமது (பா.ஜனதா) அரசை அமைக்க முடியாது என்ற முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் வந்துவிட வேண்டாம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த மாநிலத்தில் நாம் ஆட்சியமைப்போம். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தற்போது இந்த சட்ட மேலவைக்கான தேர்தல் முடிவதற்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
மத்திய அமைச்சர் பேச்சின் மூலம் கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் செய்ததுபோல் பா.ஜனதா ஈடுபட வாய்ப்புள்ளதோ என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X