என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தாக்கிய பூனை
Byமாலை மலர்21 Nov 2020 10:22 AM GMT (Updated: 21 Nov 2020 10:22 AM GMT)
அரசு மருத்துவமனையில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை பூனை தாக்கியதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போபால்:
மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவபிரிவில் புதிதாக பிறந்த குழந்தைகள் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளை அங்கு சுற்றித்திரிந்த பூனை தாக்கியுள்ளது. பூனை தாக்கியதில் ஒரு குழந்தையின்
முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய பூனை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-
இந்த வாரத்தில் மருத்துவமனையில் இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை பூனை ஒன்று தாக்கியுள்ளது. பூனை தாக்கிய பச்சிளம் குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளன. பூனையை பிடித்து செல்ல வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளேம்.
என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X