என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் மாநில கல்வி அமைச்சர் மேவா லால் சவுத்ரி ராஜினாமா
Byமாலை மலர்19 Nov 2020 10:44 AM GMT (Updated: 19 Nov 2020 10:44 AM GMT)
பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பீகார் மாநில கல்வி அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பான குழப்பம் நிலவி வருகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதால் கடந்த திங்கட்கிழமை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் மேவா லால் சவுத்திரியும் அமைச்சராக பதவி ஏற்றார்.
அவருக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தனது கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஊழல் குறித்து குற்றம்சாட்டியதால் பதவி விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன.
பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பீகார் அரசியலில் பரபரப்பான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X