search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்
    X
    இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்திய ராணுவ அதிகாரி பலி

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்: 

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். 

    இந்த திடீர் தாக்குதலில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த ராகேஷ் தோவல் என்ற ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்தார். மேலும், ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.

    உயிரிழந்த பாதுகாப்பு படை அதிகாரி ராகேஷ் உத்தரகாண்ட் மாநிலம் கங்கா நகரை சேர்ந்தவர் என எல்லைப்பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×