search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளின்குமார் கட்டீல்
    X
    நளின்குமார் கட்டீல்

    இன்னும் 2½ ஆண்டுகள் எடியூரப்பாவே முதல்-மந்திரி: நளின்குமார் கட்டீல்

    சூரியன் உதிப்பது எப்படியோ, அதுபோல, எடியூரப்பா இன்னும் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருப்பதும் உண்மை. எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பா.ஜனதாவில் எந்த விதமான பேச்சும் எழவில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்பட இருப்பதாக சித்தராமையா கூறி வருகிறார். பா.ஜனதாவில் தலைமையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இன்னும் 2½ ஆண்டுகள் எடியூரப்பாவே முதல்-மந்திரியாக இருப்பார். சூரியன் உதிப்பது எப்படியோ, அதுபோல, எடியூரப்பா இன்னும் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருப்பதும் உண்மை. எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பா.ஜனதாவில் எந்த விதமான பேச்சும் எழவில்லை. இந்த விவகாரத்தில் சித்தராமையா கருத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. பா.ஜனதா பற்றி பேசுவதற்கு அவர் யார்?. பா.ஜனதா கட்சி எடுக்கும் முடிவு குறித்து தீர்மானிப்பது சித்தராமையாவா?.

    எடியூரப்பா ஒரு போராட்டக்காரர். அவர் போராடியே பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியவர். அரசியல் காரணங்களுக்காக எடியூரப்பா மாற்றப்படுவார் என்று சித்தராமையா கூறுவது சரியல்ல. எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து சித்தராமையாவை ஓரங்கட்ட டி.கே.சிவக்குமார் நினைப்பதாக சொல்கிறார்கள். அதுபற்றி நாங்கள் எதுவும் பேச முடியுமா?. எடியூரப்பாவின் அனுபவம், வயது கூட எனக்கில்லை. அவரது வழியில் நானும் செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×