என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவம்பர் 16-ம் தேதி சபரிமலை நடை திறப்பு - தேவசம்போர்டு
Byமாலை மலர்29 Oct 2020 6:18 PM GMT (Updated: 29 Oct 2020 6:18 PM GMT)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் சுவாமியின் நடை, பக்தர்களின் தரிசனத்திற்காக ஆண்டுதோறும் 3 மாதங்கள் திறக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நெறிமுறைகள் கூட்டம் சேரும் இடங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது.
வழக்கமாக நடை திறக்கும் காலங்களில் நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு சபரிமலைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர்கள் கூறியதாவது:
நடை திறந்தபின் ஆரம்பக் காலங்களில் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொற்று இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ்கள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X