என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை
Byமாலை மலர்29 Oct 2020 1:07 AM GMT (Updated: 29 Oct 2020 1:07 AM GMT)
இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
ஹாங்காங்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது.
அதே சமயம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சில நாடுகள் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் ஹாங்காங் அரசு நிர்வாகம் பிறப்பித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை ஹாங்காங் விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மும்பை ஹாங்காங் விமானங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது” என்றார்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது.
அதே சமயம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சில நாடுகள் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் ஹாங்காங் அரசு நிர்வாகம் பிறப்பித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை ஹாங்காங் விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மும்பை ஹாங்காங் விமானங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது” என்றார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X