search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமானம்
    X
    ரபேல் போர் விமானம்

    விமானப்படையை மேலும் வலுசேர்க்கும் வகையில் அடுத்த மாதம் 3 ரபேல் விமானம் வருகிறது

    பிரான்ஸில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இந்தியா வந்தடைகின்றன.
    நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாயில் 36 விமானங்கள் வாங்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    பிரான்ஸ் நிறுவனம் முதல் தவணையாக ஐந்து விமானங்களை வழங்கியது. இந்த விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த பின்னர், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி மேலும் 3 விமானங்கள் வருகின்றன.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரலில் 6 விமானங்களும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×