என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபானம் கொண்டு சென்ற லாரி விபத்தில் சிக்கியது- சாலையில் ஆறாக ஓடிய ‘பீர்’
Byமாலை மலர்21 Oct 2020 2:38 AM GMT (Updated: 21 Oct 2020 2:38 AM GMT)
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா அருகே மதுபானம் கொண்டு சென்ற லாரி விபத்தில் சிக்கியது. இதனால் சாலையில் ஆறாக ஓடிய பீரை மது பிரியர்கள் வடிகட்டி பிடித்து சென்றனர்.
ஹாசன்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து ‘பீர்’ உள்ளிட்ட மதுபான வகைகள் ஒரு லாரியில் நேற்று கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரியில் சுமார் 900 பாக்சுகளில் ‘பீர்’ உள்ளிட்ட மதுபானங்கள் இருந்தன. அந்த லாரி ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் சுமார் 100 பாக்சுகளில் இருந்த ‘பீர்’ பாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதனால் அந்த சாலையில் ‘பீர்’ ஆறாக ஓடியது. இதனை பார்த்த மது பிரியர்கள் உடனடியாக அங்கு வந்து, சாலையில் தேங்கி கிடந்த பீரை வடிகட்டி பிடித்து சென்றனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து ‘பீர்’ உள்ளிட்ட மதுபான வகைகள் ஒரு லாரியில் நேற்று கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரியில் சுமார் 900 பாக்சுகளில் ‘பீர்’ உள்ளிட்ட மதுபானங்கள் இருந்தன. அந்த லாரி ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் சுமார் 100 பாக்சுகளில் இருந்த ‘பீர்’ பாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதனால் அந்த சாலையில் ‘பீர்’ ஆறாக ஓடியது. இதனை பார்த்த மது பிரியர்கள் உடனடியாக அங்கு வந்து, சாலையில் தேங்கி கிடந்த பீரை வடிகட்டி பிடித்து சென்றனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X