என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புனேயில் பலத்த மழை - வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
Byமாலை மலர்16 Oct 2020 12:44 AM GMT (Updated: 16 Oct 2020 12:44 AM GMT)
புனேயில் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்கப்பட்டனர்.
மும்பை:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மராட்டியத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. புனேயில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்தநிலையில் அன்று மாலை கானோட்டா கிராமத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய கால்வாயை 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கடந்து செல்ல முயன்றனர். அப்போது துரதிருஷ்டவசமாக 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடினர். இதில் 3 பேர் நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புனேயில் 9.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதேபோல மராட்டிய தலைநகர் மும்பையிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாதா் இந்து மாதா, கிங் சர்க்கிள், காலாசவுக்கி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. நகரில் 24 மணி நேரத்தில் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மராட்டியத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. புனேயில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்தநிலையில் அன்று மாலை கானோட்டா கிராமத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய கால்வாயை 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கடந்து செல்ல முயன்றனர். அப்போது துரதிருஷ்டவசமாக 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடினர். இதில் 3 பேர் நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புனேயில் 9.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதேபோல மராட்டிய தலைநகர் மும்பையிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாதா் இந்து மாதா, கிங் சர்க்கிள், காலாசவுக்கி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. நகரில் 24 மணி நேரத்தில் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X