search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    மெட்ரோ ரெயில் சேவைக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி

    ‘மீண்டும் தொடக்கம்’ வழிகாட்டுதல் அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவைக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது.
    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோது, மகாராஷ்டிரா அரசும் அதை கடைபிடித்தது.

    அதன்பின் ஐந்து கட்டங்களாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் மகாராஷ்ரா அரசு 2-வது அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கோவில் தரிசனம், மெட்ரோ ரெயில் போன்றவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது.

    இந்நிலையில் நாளையில் இருந்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மராட்டிய அரசு அனுமதி அளித்துள்ளது. மராட்டிய அரசின் புதிய மீண்டும் தொடக்கம் வழிகாட்டு நெறிமுறையை கடைபிடித்து இயக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×