search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    போராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல - உச்ச நீதிமன்றம்

    போராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  

    இந்த சூழலில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை போராட்டக்காரர்கள் கால வரையின்றி  ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×