என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்
Byமாலை மலர்29 Sep 2020 2:43 AM GMT (Updated: 29 Sep 2020 2:43 AM GMT)
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரு :
34 இடங்களை கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரினார். ஆனால், மந்திரிசபை விஸ்தரிப்புக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 26-ந் தேதி நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்த பேச்சு மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பாவிடம் நிருபர்கள், மந்திரிசபையை எப்போது விரிவாக்கம் செய்ய உள்ளீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த எடியூரப்பா, “இன்னும் 3 நாட்களில் நான் டெல்லி செல்ல உள்ளேன். அங்கு எங்கள் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளேன். அதன் பிறகு மந்திரிசபை விஸ்தரிக்கப்படும்“ என்றார். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினாலும், மந்திரிசபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி, தனது மந்திரி பதவியை ராஜிானமா செய்வார் என்று கூறப்படுகிறது. அதே போல் மேலும் சில மந்திரிகளும் மந்திரிசபையில் இருந்து கைவிடப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
34 இடங்களை கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரினார். ஆனால், மந்திரிசபை விஸ்தரிப்புக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 26-ந் தேதி நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்த பேச்சு மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பாவிடம் நிருபர்கள், மந்திரிசபையை எப்போது விரிவாக்கம் செய்ய உள்ளீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த எடியூரப்பா, “இன்னும் 3 நாட்களில் நான் டெல்லி செல்ல உள்ளேன். அங்கு எங்கள் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளேன். அதன் பிறகு மந்திரிசபை விஸ்தரிக்கப்படும்“ என்றார். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினாலும், மந்திரிசபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி, தனது மந்திரி பதவியை ராஜிானமா செய்வார் என்று கூறப்படுகிறது. அதே போல் மேலும் சில மந்திரிகளும் மந்திரிசபையில் இருந்து கைவிடப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X