என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்க கடத்தல் வழக்கு- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. 3வது முறையாக விசாரணை
Byமாலை மலர்25 Sep 2020 6:27 AM GMT (Updated: 25 Sep 2020 6:27 AM GMT)
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3-வது முறையாக விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்ட வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சிவசங்கரிடம் 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் இ.பி.கோ. பிரிவின் 160-ன் கீழ் மேலும் ஒரு வழக்கை என். ஐ.ஏ. பதிவு செய்து உள்ளது. இது தொடர்பாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன்படி நேற்று காலை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சிவசங்கர் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நேற்று 3-வது முறையாக காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறிய போது, இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்ட வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சிவசங்கரிடம் 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் இ.பி.கோ. பிரிவின் 160-ன் கீழ் மேலும் ஒரு வழக்கை என். ஐ.ஏ. பதிவு செய்து உள்ளது. இது தொடர்பாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன்படி நேற்று காலை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சிவசங்கர் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நேற்று 3-வது முறையாக காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறிய போது, இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X