என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - 28 செ.மீ. கொட்டித்தீர்த்தது
Byமாலை மலர்23 Sep 2020 8:55 PM GMT (Updated: 23 Sep 2020 8:55 PM GMT)
வரலாறு காணாத மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
மும்பை:
இந்த பருவமழை காலத்தில் ஏற்கனவே சில தடவை மும்பை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீண்டும் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேற்கு புறநகரில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது நள்ளிரவில் பலத்த மழையாக மாறி விடிய-விடிய கொட்டித்தீர்த்தது.
காலையில் எழுந்த மக்கள் கண்விழித்து பார்த்தபோது தங்களது பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பல குடிசைப்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் இரவு விடிய விடிய தூக்கத்தை தொலைத்து தவித்தனர்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அவசர வேலை காரணமாக வெளியே சென்றவர்கள் சாலையில் ஏரி போல தேங்கி இருந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பலர் வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
பல இடங்களில் வாகனங்கள் மூழ்கி கிடந்தது பிரளயத்தின் சோக சுவடுகளாக அமைந்தது.
மீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், அவசர தேவை பணிகளை தவிர மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார். அதன்படி அரசு அலுவலகங்களும், ஏராளமான தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. ஐகோர்ட்டுக்கும் விடுமுறை விடப்பட்டது.
சாலையில் 29 இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியதால், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருசில பஸ்கள் மட்டும் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இயக்கப்பட்டன.
சயான்-குர்லா, சுன்னாப்பட்டி-குர்லா இடையே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி கால்வாய் போல காட்சியளித்தது. இதனால் மத்திய ரெயில்வேயில் சி.எஸ்.எம்.டி.- தானே, சி.எஸ்.எம்.டி.- வாஷி இடையே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் அதிகாலை 5 மணி முதல் ரத்து செய்யப்பட்டன. இதேபோல மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட்-அந்தேரி வழித்தடத்திலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து அடியோடு முடங்கியதால் அத்தியாவசிய ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நெடுந்தூர ரெயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நகரம் வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோனது.
மீட்பு பணியை மாநகராட்சி முடுக்கி விட்டது. பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
மும்பையை பொறுத்தவரை 1974-ம் ஆண்டு முதல் பெய்த 4-வது பெருமழை இதுவாகும் என மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் கோசலிகர் தெரிவித்தார். இதில் அதிகப்பட்சமாக 1981-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி 30.18 செ.மீ. மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டில் அதே செப்டம்பர் 23-ந் தேதி பெருமழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பருவமழை காலத்தில் ஏற்கனவே சில தடவை மும்பை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீண்டும் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேற்கு புறநகரில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது நள்ளிரவில் பலத்த மழையாக மாறி விடிய-விடிய கொட்டித்தீர்த்தது.
காலையில் எழுந்த மக்கள் கண்விழித்து பார்த்தபோது தங்களது பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பல குடிசைப்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் இரவு விடிய விடிய தூக்கத்தை தொலைத்து தவித்தனர்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அவசர வேலை காரணமாக வெளியே சென்றவர்கள் சாலையில் ஏரி போல தேங்கி இருந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பலர் வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
பல இடங்களில் வாகனங்கள் மூழ்கி கிடந்தது பிரளயத்தின் சோக சுவடுகளாக அமைந்தது.
மீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், அவசர தேவை பணிகளை தவிர மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார். அதன்படி அரசு அலுவலகங்களும், ஏராளமான தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. ஐகோர்ட்டுக்கும் விடுமுறை விடப்பட்டது.
சாலையில் 29 இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியதால், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருசில பஸ்கள் மட்டும் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இயக்கப்பட்டன.
சயான்-குர்லா, சுன்னாப்பட்டி-குர்லா இடையே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி கால்வாய் போல காட்சியளித்தது. இதனால் மத்திய ரெயில்வேயில் சி.எஸ்.எம்.டி.- தானே, சி.எஸ்.எம்.டி.- வாஷி இடையே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் அதிகாலை 5 மணி முதல் ரத்து செய்யப்பட்டன. இதேபோல மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட்-அந்தேரி வழித்தடத்திலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து அடியோடு முடங்கியதால் அத்தியாவசிய ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நெடுந்தூர ரெயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நகரம் வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோனது.
மீட்பு பணியை மாநகராட்சி முடுக்கி விட்டது. பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
மும்பையை பொறுத்தவரை 1974-ம் ஆண்டு முதல் பெய்த 4-வது பெருமழை இதுவாகும் என மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் கோசலிகர் தெரிவித்தார். இதில் அதிகப்பட்சமாக 1981-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி 30.18 செ.மீ. மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டில் அதே செப்டம்பர் 23-ந் தேதி பெருமழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X