என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்- கேரள விவசாய மந்திரி பேட்டி
திருவனந்தபுரம்:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதாக்கள் நேற்று எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்களிடையே பாராளுமன்றத்திலும், மேல் சபையிலும் நிறைவேறியது.
இந்த மசோதாக்களுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேளாண் மசோதாவை கடுமையாக எதிர்த்தது.
இந்த நிலையில் வேளாண் மசோதாக்கள் பாராளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து கேரள மாநில விவசாய மந்திரி சுனில் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை எதிர்க்கிறோம். இந்த சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடருவது குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம்.
வருகிற 30-ந் தேதிக்குள் இதுதொடர்பான அறிக்கை அளிக்கும்படியும் அவர்களிடம் கூறியுள்ளோம்.
சட்ட நிபுணர்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது குறித்து முடிவு செய்வோம்.
இந்த மசோதா மூலம் கார்ப்ரேட்டுகள் மட்டுமே பலன் அடைவார்கள். ஏழை விவசாயிகள் யாருக்கும் இதனால் எந்த பலனும் கிடைக்காது. எனவே தான் இந்த மசோதாவை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்