என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்குங்கள்... பாராளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்17 Sep 2020 10:40 AM GMT (Updated: 17 Sep 2020 10:40 AM GMT)
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவில்லை என பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக கூட்டாக ஆலோசனை மேற்கொண்டு தீர்மானமும் நிறைவேற்றினர்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி ஆகியோருக்கு கடிதமும் எழுதினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்கியபிறகும் எதிர்கட்சியினர் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
#WATCH Delhi: TRS, TMC, DMK, RJD, AAP, NCP, Samajwadi Party and Shiv Sena MPs protest in front of Mahatma Gandhi statue at the Parliament premises, demanding GST payments to states. pic.twitter.com/x9f5azAY0I
— ANI (@ANI) September 17, 2020
இந்நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க வலியுறுத்தி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கூட்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் திமுக சார்பில் டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், ஆர்எஸ் பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி நிலுவையை வழங்கக் கோரி அந்தந்த மாநில மொழிகளில் வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியதுடன், அவரவர் மாநில மொழிகளில் முழக்கமிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X