என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக சித்த மருத்துவ நிறுவனத்திற்கு தேசிய அந்தஸ்து வேண்டும் -மாநிலங்களவையில் தம்பிதுரை எம்பி பேச்சு
Byமாலை மலர்16 Sep 2020 8:59 AM GMT (Updated: 16 Sep 2020 8:59 AM GMT)
குஜராத் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் இருக்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் வேண்டுகோள் விடுத்தார்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் இன்று ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா மீதான விவாதத்தில், அதிமுக எம்பி தம்பிதுரை பேசியதாவது:-
சித்த மத்துவமும் மிகச்சிறந்த மருத்துவ முறை. எனவே, தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்குவது பற்றி சுகாதாரத்துறை மந்திரி பரிசீலனை செய்ய வேண்டும். குஜராத் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
‘கேரளத்தில் ஆயுர்வேத மருத்துவம் பிரபலமானது. அப்படியிருந்தும் ஆயுர்வேத கல்வி நிறுவனம் குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது ஏன் கேரளாவைப் பற்றி அரசு நினைக்கவில்லை? ஆயுர்வேதத்திற்கு கேரளாவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி கே.கே.ராஜேஷ் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X