search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    சித்தூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி

    சித்தூர் அருகே இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் சதும் அடுத்த சிந்தப்பர்த்தி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமஸ்ரீ (வயது 24). இவருக்கு திருமணம் முடிந்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

    இந்நிலையில் உதயகுமார் (26) என்பவருடன் ஹேமஸ்ரீக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த உறவினர்கள் அவரை கண்டித்ததுடன், கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினர்.

    ஆனால் கள்ளக்காதலை கைவிட இயலாத ஹேமஸ்ரீ இது பற்றி உதயகுமாருக்கு தகவல் கூறினார்.

    இதையடுத்து 2 பேரும் சிந்துப்பர்த்தி பள்ளி கிராமம் அருகே உள்ள கிணற்றுக்கு சென்று அதில் இரட்டை குழந்தைகளை தூக்கி வீசி கொன்றனர். பின்னர் 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி உயிருக்கு போராடிய நிலையில் முட்புதரில் கிடந்தனர்.

    அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் கூறினர். அவர்கள் அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்து வந்த சதும் போலீசார் குழந்தைகளின் உடல்களை கிணற்றிலிருந்து மீட்டனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×