search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட ஆலை
    X
    தீ விபத்து ஏற்பட்ட ஆலை

    மகாராஷ்டிராவில் சோகம் - கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலி

    மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர் என பால்கர் கலெக்டர் கைலாஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×