search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷவாயு தாக்கி பலி
    X
    விஷவாயு தாக்கி பலி

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் பலி

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராஞ்சி:

    ஜார்கண்ட்டின் தியோகாரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை நேற்று தொழிலாளர்கள் 2 பேர் சுத்தம் செய்ய முயன்றனர். தொட்டிக்குள் இறங்கிய 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்தனர். உடனே வீட்டு உரிமையாளரின் 2 மகன்களும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உதவிக்காக பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துள்ளார். உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி இறந்தனர். கழிவுநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த 6 பேரின் உடல்களையும் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×