என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் சாராயத்துடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்31 July 2020 6:04 AM GMT (Updated: 31 July 2020 6:04 AM GMT)
ஆந்திராவில் தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை அதிக போதைக்காக சாராயத்துடன் கலந்து குடித்து 10 பேர் உயிரிழந்தனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறிச்சேடு பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டதால், கடந்த 10 நாட்களாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் 20 பேர் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது.
சானிடைசர் குடித்ததால் பாதிக்கபட்ட 20 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு புதன் கிழமை ஒருவர் மரணமடைந்தார். நேற்று வியாழக்கிழமை 3 பேர் மரணமடைந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X