என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்கம்
Byமாலை மலர்16 July 2020 1:30 PM GMT (Updated: 16 July 2020 1:32 PM GMT)
ஜூலை 18-ல் இருந்து ஆகஸ்ட் 1-ந்தேதி வரை பாரிஸ்க்கு ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் 28 விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 23-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது. மே மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது.
ஆனால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பாரிஸ்க்கு ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி வரை 28 விமாங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமெரிக்காவுக்கு ஜூலை 17-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 18 விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது தற்காலிகமானது என்றும், ஜெர்மனியிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X