என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிக்டாகிற்கு போட்டியான ரோபோசோ: ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் டவுன்லோடு
Byமாலை மலர்15 July 2020 11:54 PM GMT (Updated: 15 July 2020 11:54 PM GMT)
டிக்டாக்கிற்கு இணையான இந்திய செயலிகளை டவுன்லோடு பயனர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக இருந்தன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் 59 சீன செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
குறிப்பாக டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது, அதன் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் நாட்டின் நலன் கருதி அரசின் இந்த தடை உத்தரவை ஏற்றனர் டிக்டாக் பயனாளர்கள்.
இந்தியாவில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு உள்நாட்டு பொழுதுபோக்கு செயலிகள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளால் தங்களது சந்தை மதிப்பை இழந்த ரோபோசோ, ஷேர்சாட் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் தங்களது சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிளே ஸ்டோர் தளத்தில் டிக்டாக் நீக்கப்பட்ட பின்னர் ஷேர்சாட், சிங்காரி, ரொபோசோ, செயலிகள் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் சார்பாகவும் ரீல்ஸ் என்ற புதிய வீடியோ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு தடை செய்யப்பட்ட பின்னர் நம்ப முடியாத வகையில் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ரோபோசோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரோபோசோ நிறுவனர் நவீன் திவாரி கூறுகையில், “டிக்டாக் தடை செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது செயலியில் புதிதாக 5 லட்சம் பேர் இணைந்துவிட்டனர். இந்த மாத இறுதிக்குள் 10 கோடி பேர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சீன செயலிகளுக்கு தடைவிதித்த இந்திய அரசின் உத்தரவானது இந்திய ஸ்டார்ட் அப் துறைக்கு நல்ல வாய்ப்பாகும்” என்றார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலமாக விரைவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவைத் தொடர்ந்து உலகின் நான்காவது மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக நம்மால் உயர முடியும் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X