என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே மாதிரியான சதவீதம், மதிப்பெண்கள் பெற்ற நொய்டா இரட்டை சகோதரிகள்
Byமாலை மலர்15 July 2020 2:59 PM GMT (Updated: 15 July 2020 2:59 PM GMT)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான சதவீதம், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.
நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா ஆகியோர் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி ஒன்பது நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தனர். இந்த இரட்டையர்களைப் பிரிக்கும் ஒரே விஷயம் இதுதான்.
இருவருக்கும் ஒரே மாதிரியான முகங்களும் குரல்களும் அமைந்துள்ளன. இருவருக்கும் பூப்பந்து விருப்பமான விளையாட்டு. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கூட ஒரே மாதிரியானவைதான்.
12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
அறிவியல் பாடப்பிரிவு எடுத்துள்ள இருவரும் 95.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். இருவரும் 5 பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்து உள்ளனர். சகோதரிகள் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் 98 மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், இயற்பியல், வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மான்சி கூறும்போது ‘‘ஐந்து பாடங்களிலும் எங்கள் மதிப்பெண்கள் ஒரே மதிப்பெண் கிடைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் ஒரே மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு தற்செயலான நிகழ்வு’’ என்றார்.
இருவருக்கும் ஒரே மாதிரியான முகங்களும் குரல்களும் அமைந்துள்ளன. இருவருக்கும் பூப்பந்து விருப்பமான விளையாட்டு. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கூட ஒரே மாதிரியானவைதான்.
12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மான்சி கூறும்போது ‘‘ஐந்து பாடங்களிலும் எங்கள் மதிப்பெண்கள் ஒரே மதிப்பெண் கிடைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் ஒரே மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு தற்செயலான நிகழ்வு’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X