என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலபுரகி மாவட்ட மத்திய சிறையில் 10 கைதிகளுக்கு வைரஸ் தொற்று
Byமாலை மலர்11 July 2020 8:13 AM GMT (Updated: 11 July 2020 8:13 AM GMT)
கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
கலபுரகி:
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா, துமகூரு மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த கைதிகள் 10 பேரும் சமீபத்தில் பரோலில் சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் 10 கைதிகளுக்கும் கொரோனா இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. அந்த கைதிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மத்திய சிறையில், அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மற்ற கைதிகள் இடையே கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X