search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
    X
    கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

    அருணாச்சல பிரதேசத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

    அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    லாங்டிங்:

    அருணாச்சல பிரதேச மாநிலம் லாங்டிங் மாவட்டம் நிகினு கிராமத்தின் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் ரைபிள்ஸ் படை, அருணாச்சல பிரதேச போலீசார் இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டுக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த குடிசை

    பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாக மாநில டிஜிபி உபாத்யாயா தெரிவித்தார்.
    Next Story
    ×