search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - கேரள முதல் மந்திரி

    திருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தற்போது 3,099 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. கேரளா தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×