என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் - 68 வயது மூதாட்டியை தாக்கிய கணவர்
Byமாலை மலர்10 July 2020 6:34 AM GMT (Updated: 10 July 2020 6:49 AM GMT)
பெங்களூருவில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு 68 வயது மூதாட்டியை முன்னாள் அரசு ஊழியர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு ஜெயநகரில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகின்றனர். அந்த முதியவருக்கு 75 வயதாகிறது. மூதாட்டிக்கு 68 வயதாகிறது. முதியவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இந்த தம்பதியின் வீட்டின் முதல் மாடியில் 35 வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
அந்த வாலிபரின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், மூதாட்டிக்கு அந்த வாலிபர் வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாததாலும், வயதாகி விட்டதாலும் வீட்டில் உள்ள வேலைகளை மூதாட்டிக்காக வாலிபர் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று முதியவர் சந்தேகப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை முதியவர் அடித்து, உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு மூதாட்டி புகார் அளித்துள்ளார். அதாவது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் வாலிபரை தனது மகன் போல நினைத்து பழகியதாகவும், ஆனால் அவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தனது கணவர் தன்னை அடித்து, உதைத்து தாக்கிவிட்டதாகவும் அந்த மூதாட்டி கூறி இருந்தார்.
இதுகுறித்து அதிகாரி சரஸ்வதி கூறுகையில், “மூதாட்டி மீது சந்தேகப்பட்டு அவரை அவரது கணவர் தாக்கியுள்ளார். ஆனால் மூதாட்டி அந்த வாலிபரை தனது மகன் போன்றவர் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதியவருக்கு தவறான புரிந்துணர்வு ஏற்பட்டு இருக்கலாம்,“ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X