என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் 6 புதிய பாலங்கள்- காணொலி வாயிலாக திறந்து வைத்தார் ராணுவ மந்திரி
Byமாலை மலர்9 July 2020 6:04 AM GMT (Updated: 9 July 2020 6:04 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட 6 புதிய பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) செய்து வருகிறது. அவ்வகையில், ஜம்மு செக்டாரில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 6 புதிய பாலங்களை பிஆர்ஓ கட்டமைத்துள்ளது. இந்த பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
ராணுவ மந்திரி டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக பாலங்களை திறந்து வைத்தார். உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அதேசமயம் பாலங்கள் உள்ள பகுதிகளில் நடைபெற்ற விழாவில், அந்தந்த பகுதி ராணுவ அதிகாரிகள் பங்கேற்று, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கூடுதலாக ரூ.1691 கோடி மதிப்பீட்டில் பிஆர்ஓ நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X