என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷ வாயு கசிவால் 14 பேர் பலி: எல்.ஜி. பாலிமர்ஸ் சிஇஓ, எம்.டி. உள்பட 12 பேர் கைது
Byமாலை மலர்7 July 2020 5:05 PM GMT (Updated: 7 July 2020 5:05 PM GMT)
விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவால் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே மாதம் 7-ந்தேதி அதிகாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டது.
தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. கிராமங்களுக்கு விஷ வாயு பரவியது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் விஷ வாயுயை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.
சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷ வாயு கசிவால் குழந்தை உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விஷ வாயு கசிவு காரணமாக கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாற்று வாயுவை செலுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பான வழக்கில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ, எம்.டி, டெக்னிக்கல் டைரக்டர், இரண்டு டைரக்டர்கள், மற்ற ஸ்டாஃப்கள் உள்பட 12 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். எம்.டி, டெக்னிக்கல் டைரக்டர் ஆகியோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X