என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் லேசான நிலநடுக்கம் - டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம்
Byமாலை மலர்3 July 2020 2:02 PM GMT (Updated: 3 July 2020 2:02 PM GMT)
மிசோரம், அரியானாவில் இன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரியானாவின் தென்மேற்கே 63 கி.மீ. தொலைவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதேபோல், மிசோரமின் சம்பால் பகுதியில் இன்று மதியம் 2.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, சத்தீஸ்கர் என கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X