என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி: எடியூரப்பா பேச்சு
Byமாலை மலர்30 Jun 2020 3:38 AM GMT (Updated: 30 Jun 2020 3:38 AM GMT)
மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மறைந்த நடிகர் அம்பரீஷ் நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
அம்பரீஷ் நினைவு மண்டபம், பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் 1.34 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த பணிகளை தொடங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில் நடிகர் அபிஷேக் அம்பரீஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், மூத்த நடிகர் தொட்டண்ணா, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் மகேஷ்வரராவ், கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மறைந்த நடிகர் அம்பரீஷ் நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
அம்பரீஷ் நினைவு மண்டபம், பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் 1.34 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த பணிகளை தொடங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில் நடிகர் அபிஷேக் அம்பரீஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், மூத்த நடிகர் தொட்டண்ணா, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் மகேஷ்வரராவ், கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X