search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு மண்டபம்"

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    • பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.
    • மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி :

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி பிரதீமா பவுமிக் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுமூலம் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்றார். அங்கு பாறையில் இயற்கையாகவே பதிந்திருந்த பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.அதன்பிறகு அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்வையிட்டார். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே கண்ணாடி கூண்டு இழை யினால் ஆன இணைப்பு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவ தால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடக்க வில்லை. இதனால் மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திரு வள்ளுவர் சிலையையும் பார்வை யிட்டார்.

    அதன்பிறகு அவர் மீண்டும் அதே படகில் கரைக்கு திரும்பினார். மத்திய மந்திரி வருகையை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு
    • 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன், சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இதனால் அந்தப் பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக் கால் பாதம் இயற்கையாகவே பதிந்து இருந்தது. இந்தக் கால் பாதத்தை பார்த்து சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு தியானம் செய்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று பேசினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணி க்கப்பட்டது. அன்றுமுதல் இந்த மண்ட பத்தை தினமும் ஆயிர க்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்க ள். இந்த மண்டபம் நிறுவி 52 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு வழங்கப்பட்டது.

    கடந்த 53 வருடங்களில் இன்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    • தூர்வாரும் கப்பல் மூலம் மணல் அகற்றும் பணி
    • இன்று காலை தொடங்கியது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம், நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, உள்வாங்குதல் போன்ற இயற்கை மாற்றங்களினால் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கூண்டுப்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடை பாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும். இந்த நிலையில், இந்த பணிகள் ஜனவரி 2024-ல் நிறைவுபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மிக்க நவீன கடல் சார் பாதசாரிகள் பாலத்தை மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவியுடன் சாகர் மாலா திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறது.

    இதில் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஜனவரி 2024-ல் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் கண்ணாடி பாலம் அமைப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பல் போன்ற அமைப்பு கொண்ட மெர்ஜி என்னும் படகு கடந்த மாதம் 21-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படகு விவேகானந்தர் மண்டபத்தில் கூடுதல் படகு தளம் அமைப்பதற்காக படகு தளத்தை ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கான கிரேனை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விவேகானந்தர் பாறையின் அருகில் கடல் நடுவே தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை விவேகானந்தர் பாதையில் படகு நிறுத்தும் தளத்தில் தூர்வாரி கப்பல் மூலம் மணலை அகற்றி ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.

    ×