என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு- கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி
Byமாலை மலர்20 Jun 2020 5:59 AM GMT (Updated: 20 Jun 2020 5:59 AM GMT)
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுடெல்லி:
இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில் இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இத்திட்டப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், துறை சார்ந்த மந்திரிகள் பங்கேற்றனர்.
6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 125 நாட்கள் இப்பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில் இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இத்திட்டப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், துறை சார்ந்த மந்திரிகள் பங்கேற்றனர்.
6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 125 நாட்கள் இப்பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X