search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகாஷ் ஜவடேகர்
    X
    பிரகாஷ் ஜவடேகர்

    யானைகளை கொல்வது இந்திய கலாசாரம் அல்ல: பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

    நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    கேரளாவில், அன்னாசி பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டை வைத்து ஊட்டியதால், ஒரு கர்ப்பிணி யானை, வாய் வெடித்து உயிரிழந்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

    யானை கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×