என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியபிரதேசத்தில் பெயிண்ட் கடையில் தீ விபத்து - 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
Byமாலை மலர்19 May 2020 6:59 AM GMT (Updated: 19 May 2020 6:59 AM GMT)
மத்தியபிரதேசத்தில் பெயிண்ட் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 குழந்தைகள், 3 பெண்கள் என 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குவாலியர்:
மத்தியபிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்த பெயிண்ட் டப்பாக்களில் தீ பரவியதால் கடையில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். கடையின் மாடியில் கடை உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த தீ விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மாடியில் உள்ள வீட்டுக்கும் பரவியதில், அங்கிருந்த 4 குழந்தைகள், 3 பெண்கள் என 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்படடது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தியபிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்த பெயிண்ட் டப்பாக்களில் தீ பரவியதால் கடையில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். கடையின் மாடியில் கடை உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த தீ விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மாடியில் உள்ள வீட்டுக்கும் பரவியதில், அங்கிருந்த 4 குழந்தைகள், 3 பெண்கள் என 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்படடது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X