என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் - நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்17 May 2020 6:47 AM GMT (Updated: 17 May 2020 12:41 PM GMT)
கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை வெளியிட்டார். இதில் அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பேசிய அவர், கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன நிலையில் மேலும் 12 அலைவரிசைகள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் கல்வி கற்க தேவையான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், டிடிஎச் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கல்வி தொடர்பாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 மின்னணு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா காலத்தில் தொழில்நுட்பங்கள் மூலம் ஆன்லைன் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான உரையாடல் குறித்து புதிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X