என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குவிந்த மக்கள் - முடங்கிய ஐஆர்சிடிசி இணைய தள பக்கம்
Byமாலை மலர்11 May 2020 12:18 PM GMT (Updated: 11 May 2020 12:18 PM GMT)
ரெயிலில் பயணச்சீட்டு முன்பதிவு 4 மணிக்கு தொடங்கிய நிலையில் லட்சக்கணக்கானோர் இணையதளபக்கத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி பக்கம் முடங்கியது.
புதுடெல்லி:
மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாளை முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 30 ரெயில்கள் மட்டும் 20-ந்தேதி வரை இயக்குவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் ரெயில் ஓடத் தொடங்கும். நாடு முழுவதும் 15 முக்கிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டுமே இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதள பக்கத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி பக்கமே முடங்கியது.
இதையடுத்து உடனடியாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆனால், முடயங்கிய இணையதள பக்கம் சரிசெய்யப்பட்டு இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X