என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.டி.பி.யை பகிர வேண்டாம்- எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிறுவனம் எச்சரிக்கை
Byமாலை மலர்10 April 2020 7:23 AM GMT (Updated: 10 April 2020 7:23 AM GMT)
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்து உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வருமானம் இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ.களை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ( எஸ்.பி.ஐ.) அனைத்துவித கடன்களுக்கும் 3 மாத இ.எம்.ஐ தள்ளி வைப்பு குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களிடம் இ.எம்.ஐ. தள்ளிவைப்பு தொடர்பாக புதிய ஓ.டி.பி மோசடி நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் டுவிட்டரில் கூறியதாவது;
சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வழிகளில் மோசடியை தொடங்கி விட்டனர். இது மாதிரியான மோசடியாளர்கள் கடன் இ.எம்.ஐ தள்ளிவைப்பு பற்றி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) பெறுகிறார்கள். ஒரு முறை ஓ.டி.பி.யை பகிர்ந்தால் அவர்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதனால் உங்களது ஒ.டி.பி.யை யாருடனும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வருமானம் இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ.களை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ( எஸ்.பி.ஐ.) அனைத்துவித கடன்களுக்கும் 3 மாத இ.எம்.ஐ தள்ளி வைப்பு குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களிடம் இ.எம்.ஐ. தள்ளிவைப்பு தொடர்பாக புதிய ஓ.டி.பி மோசடி நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாருடன் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் டுவிட்டரில் கூறியதாவது;
சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வழிகளில் மோசடியை தொடங்கி விட்டனர். இது மாதிரியான மோசடியாளர்கள் கடன் இ.எம்.ஐ தள்ளிவைப்பு பற்றி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) பெறுகிறார்கள். ஒரு முறை ஓ.டி.பி.யை பகிர்ந்தால் அவர்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதனால் உங்களது ஒ.டி.பி.யை யாருடனும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X