என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் தடுப்புக்கான பிரதமர் நிதிக்கு தலாய்லாமா நன்கொடை
Byமாலை மலர்1 April 2020 4:38 AM GMT (Updated: 1 April 2020 4:38 AM GMT)
இமாசலபிரதேசத்தில் தரம்சாலாவில் தங்கியுள்ள திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா பிரதமர் நிதிக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நன்கொடை வழங்கி உள்ளார்.
தர்மசாலா :
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி திரட்டுகிற ‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு (பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசரகால சூழ்நிலை நிதி) பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இமாசலபிரதேசத்தில் தரம்சாலாவில் தங்கியுள்ள திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவும், பிரதமர் நிதிக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நன்கொடை வழங்கி உள்ளார். அவரது அலுவலக ஊழியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிரதமர் நிதிக்கு நன்கொடையாக அளித்து உள்ளனர். இதையொட்டி அவர் பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.
அதில் அவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் மோடி எடுத்து வருகிற நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரசால் கஷ்டங்களை சந்தித்து வருகிற மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தனது நன்கொடை உதவியாக இருக்கும் எனவும் கூறி உள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி திரட்டுகிற ‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு (பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசரகால சூழ்நிலை நிதி) பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இமாசலபிரதேசத்தில் தரம்சாலாவில் தங்கியுள்ள திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவும், பிரதமர் நிதிக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நன்கொடை வழங்கி உள்ளார். அவரது அலுவலக ஊழியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிரதமர் நிதிக்கு நன்கொடையாக அளித்து உள்ளனர். இதையொட்டி அவர் பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.
அதில் அவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் மோடி எடுத்து வருகிற நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரசால் கஷ்டங்களை சந்தித்து வருகிற மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தனது நன்கொடை உதவியாக இருக்கும் எனவும் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X