என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாய்களுக்கு திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி: ரூ.7 லட்சம் அபராதம் கட்டிய நபர்
Byமாலை மலர்7 March 2020 12:44 PM GMT (Updated: 7 March 2020 12:44 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்காக திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி செய்தவருக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலவகையான விலையுயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.
இவை வெயிலின் வெம்மையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து, தனியாக ஒரு ஒயரின் மூலம் திருட்டுத்தனமாக மின்சாரத்தை கடத்தி நாய்கள் இருக்கும் அறைக்குள் 24 மணி நேரமும் குளிர்சாதன இயந்திரங்கள் இயங்குமாறு வசதிப்படுத்திக் கொடுத்திருந்தார்.
இதை நோட்டமிட்ட சிலர் மின்சார வாரியத்தை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அந்நபரின் வீட்டை சோதனையிட்டபோது நாய்கள் சொகுசாக வாழ்வதற்காக அவர் 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருட்டுக்காக அந்நபரிடம் இருந்து மின்சார கட்டணம் மற்றும் அபராதமாக 7 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலவகையான விலையுயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.
இவை வெயிலின் வெம்மையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து, தனியாக ஒரு ஒயரின் மூலம் திருட்டுத்தனமாக மின்சாரத்தை கடத்தி நாய்கள் இருக்கும் அறைக்குள் 24 மணி நேரமும் குளிர்சாதன இயந்திரங்கள் இயங்குமாறு வசதிப்படுத்திக் கொடுத்திருந்தார்.
இதை நோட்டமிட்ட சிலர் மின்சார வாரியத்தை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அந்நபரின் வீட்டை சோதனையிட்டபோது நாய்கள் சொகுசாக வாழ்வதற்காக அவர் 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருட்டுக்காக அந்நபரிடம் இருந்து மின்சார கட்டணம் மற்றும் அபராதமாக 7 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X