என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிரிழப்பு
Byமாலை மலர்24 Feb 2020 11:24 PM GMT (Updated: 24 Feb 2020 11:24 PM GMT)
விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஜி.எஸ்.சீமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாட்டியாலா:
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஒரு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் விமானப்படையின் பயிற்சியை பார்வையிடுவதற்காக அங்குள்ள விமானப்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விமானப்படை வீரர்கள் விமானங்களை இயக்குவதை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது விபின் குமார் யாதவ் என்ற மாணவரை ஏற்றிக் கொண்டு ஜி.எஸ்.சீமா என்ற விமானப்படை விமானி, பயிற்சி விமானம் ஒன்றில் வானில் பறந்தார். இந்த விமானம் பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் சென்ற போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் விமானி ஜி.எஸ்.சீமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர் விபின் குமார் யாதவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பஞ்சாபில் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஒரு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் விமானப்படையின் பயிற்சியை பார்வையிடுவதற்காக அங்குள்ள விமானப்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விமானப்படை வீரர்கள் விமானங்களை இயக்குவதை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது விபின் குமார் யாதவ் என்ற மாணவரை ஏற்றிக் கொண்டு ஜி.எஸ்.சீமா என்ற விமானப்படை விமானி, பயிற்சி விமானம் ஒன்றில் வானில் பறந்தார். இந்த விமானம் பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் சென்ற போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் விமானி ஜி.எஸ்.சீமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர் விபின் குமார் யாதவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பஞ்சாபில் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X