என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீயணைப்பு பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம்- 2 வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்12 Feb 2020 10:01 AM GMT (Updated: 12 Feb 2020 10:01 AM GMT)
ஜம்முவில் தீயணைப்பு பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு:
ஜம்மு நகரின் டல்லப் டில்லோ பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக வெப்பத்தினால் விரிசல் அடைந்த அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 3 தளங்கள் கொண்ட கட்டிடம், திடீரென விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவி செய்தவர்கள் என சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு தீயணைப்பு வீரர் உள்ளிட்ட சிலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X