என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ஆண்டுகளில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு
Byமாலை மலர்5 Feb 2020 11:34 AM GMT (Updated: 5 Feb 2020 11:34 AM GMT)
இந்தியாவில் 2014-18 வரையிலான காலகட்டத்தில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பிரிவினைவாதத்தை தூண்டுதல், வெறுப்புணர்வை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை அனுபவிக்கும் வகையில் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை ( 5 ஆண்டுகள்) நாட்டில் எத்தனை பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணைய மந்திரி கிஷன் ரெட்டி,'' தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவலின் படி, 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை நாடு முழுவதும் 233 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு 47 பேர், 2015-ம் ஆண்டு 30 பேர், 2016-ம் ஆண்டு 35 பேர், 2017-ம் ஆண்டு 51 பேர், 2018-ம் ஆண்டு 70 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X