என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் துணிகரம் - விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்2 Feb 2020 7:32 AM GMT (Updated: 2 Feb 2020 7:32 AM GMT)
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் வசித்து வந்தவர் ரஞ்சித் பச்சன் (40). விஷ்வ இந்து மகாசபா தலைவரான ரஞ்சித் பச்சன் இன்று காலை அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவத்சாவுடன் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வாக்கிங் மேற்கொண்டார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரஞ்சித் பச்சன் மற்றும் அவரது நண்பர் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த ஸ்ரீவத்சவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட ரஞ்சித் பச்சனுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் வாக்கிங் சென்றபோது விஸ்வ இந்து மகாசபை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X