என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.ஏ.ஏ.வை ஆதரித்த மக்களுக்கு தண்ணீர் சப்ளை மறுப்பு- பா.ஜ.க. எம்.பி.யின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
Byமாலை மலர்24 Jan 2020 9:52 AM GMT (Updated: 24 Jan 2020 9:52 AM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த குடும்பங்களுக்கு தண்ணீர் சப்ளை மறுக்கப்பட்டதாக பாஜக எம்பி ஷோபா வெளியிட்ட டுவிட்டர் பதிவு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தி மக்களிடம் சட்டத்தின் அம்சங்களை விளக்கி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஷோபா கரண்ட்லஜே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள குட்டிபுரத்தைச் சேர்ந்த இந்துக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததால் அவர்களுக்கு தண்ணீர் சப்ளை மறுக்கப்பட்டுள்ளதாகவும், சேவா பாரதி அமைப்பினர் தண்ணீர் வழங்கியதாகவும் ஷோபா கூறியிருந்தார். கேரளா மாநிலம் மற்றொரு காஷ்மீர் ஆக நகர்வதாகவும் ஷோபா குறிப்பிட்டார். இந்த பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில் பாஜக எம்பி ஷோபா கரண்ட்லஜே, மதநல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி, மலப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஷோபா கரண்ட்லஜே மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதது பற்றிய தகவல், சேவா பாரதியால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சேவா பாரதி அப்பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு டேங்கர்களில் தண்ணீர் வழங்கியதாகவும் மற்றொரு அதிகாரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X