என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு
Byமாலை மலர்11 Jan 2020 1:39 AM GMT (Updated: 11 Jan 2020 1:39 AM GMT)
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையால் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. முன்னேற்றத்திற்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
மும்பை :
நாக்பூரில் உள்ள கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 100-வது அகில இந்திய ஓரியண்டல் மாநாடு நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடந்த வன்முறைகளை சுட்டிக் காட்டி கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஒரு தேசத்தின் மக்களாக நாம் எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு நேர்மறை அணுகுமுறையுடன் முன்னேற்றத்தை நோக்கி நாடு நகர்வதை தான் பார்க்க வேண்டும். இது அனைவரின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது உங்களது சொந்த நாடு. பஸ்சை எரிப்பது, ரெயிலை எரிப்பது, வாகனங்களை எரிப்பது என்ற உங்களது சிந்தனையை எரிக்க வேண்டும்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையால் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. முன்னேற்றத்திற்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது. நமக்கு பதற்றம் இருந்தால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைதியான வாழ்க்கை, அமைதியான நாடு மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மனிதகுலம் மகிழ்ச்சியுடன் செழிப்பாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாக்பூரில் உள்ள கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 100-வது அகில இந்திய ஓரியண்டல் மாநாடு நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடந்த வன்முறைகளை சுட்டிக் காட்டி கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஒரு தேசத்தின் மக்களாக நாம் எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு நேர்மறை அணுகுமுறையுடன் முன்னேற்றத்தை நோக்கி நாடு நகர்வதை தான் பார்க்க வேண்டும். இது அனைவரின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது உங்களது சொந்த நாடு. பஸ்சை எரிப்பது, ரெயிலை எரிப்பது, வாகனங்களை எரிப்பது என்ற உங்களது சிந்தனையை எரிக்க வேண்டும்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையால் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. முன்னேற்றத்திற்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது. நமக்கு பதற்றம் இருந்தால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைதியான வாழ்க்கை, அமைதியான நாடு மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மனிதகுலம் மகிழ்ச்சியுடன் செழிப்பாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X