search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர்கள்
    X
    இந்திய வீரர்கள்

    எல்லையில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை - ஒரு பயங்கரவாதி பலி

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி அளித்தனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி நமது ராணுவத்தின் மீதும் எல்லையோர கிராம மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருகிறது.  

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் இன்று துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.

    ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நோக்கி இந்திய வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவனிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    பயங்கரவாதிகளை பிடிக்க அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் துப்பாக்கி சண்டையும் நீடித்து வருகிறது.
    Next Story
    ×