search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்த சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

    இந்நிலையில், உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெஜாவர் மடத்தின் சுவாமியிடம் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.

    உடுப்பி மக்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளியாக இருந்த சுவாமிஜி, இனி மக்களின் மனங்களிலும் நிலைத்திருப்பார் என பதிவிட்டுள்ளார்.

    சுவாமியின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல் மந்திரி எடியூரப்பா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×